×

ஷேர் மார்க்கெட்டில் ரூ.26 லட்சம் மோசடி 2 பெண்கள் மீது புகார்

திருமங்கலம், ஏப்.12: திருச்சி  ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் பரத்குமார்(32). இவருக்கு பேஸ்புக் மூலமாக திருமங்கலம் மறவன்குளத்தை சேர்ந்த தவசி மகள் காளீஸ்வரி நண்பராக அறிமுகமாகியுள்ளார். ஷேர்மார்க்கெட் முதலீடு மூலமாக அதிகளவில் பணம் பெற்றுதருவதாக அவருக்கு ஆசைவார்த்தைகள் கூறி ரூ.23 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுள்ளார். ஆனால் பலமாதங்களாகியும் ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்த பணத்தை திருப்பிதரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பரத்குமார் திருமங்கலம் வந்து காளீஸ்வரியின் வீட்டிற்கு சென்று ஷேர்மார்கெட்டில் முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது காளீஸ்வரி மற்றும் அவரது தாயார் இணைந்து இவருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து பரத்குமார் கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதேபோல் திருமங்கலம் பாண்டீஸ்வரி என்பவரிடம் ஷேர்மார்கெட்டில் அதிக பணம் பெற்று தருவதாக கூறி ரூ.3 லட்சம் காளீஸ்வரி வாங்கி திருப்பிதரவில்லை. இவரும் காளீஸ்வரி மீது டவுன் போலீசில் புகார் செய்தார். இரண்டு புகார்களை தொடர்ந்து நேற்று டவுன் போலீசார் காளீஸ்வரியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...