×

பட்டபகலில் வாலிபர் வெட்டி படுகொலை ரயில்வே கேட் அருகே உடல் வீச்சு

மதுரையில் பயங்கரம்
மதுரை, ஏப்.12: மதுரையில் துப்புரவுத்தொழிலாளியை வெட்டிக்கொலை செய்து, பிணத்தை ரயில்வே கேட் அருகே வீசிச்சென்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை - திண்டுக்கல் பைபாஸ் ேராட்டில் உள்ள கரிசல்குளம் ரயில்ேவ கேட் அருகே நேற்று காலை 11 மணியளவில் வாலிபர் ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். கூடல்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன. போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் கூடல்புதூர், சொக்கலிங்க நகர் 7வது தெருவைச் சேர்ந்த துப்புரவுத்தொழிலாளி ஆறுமுகம் மகன் பிரவீன்குமார் (21) என்பது தெரிந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இக்ெகாலை சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கொலையுண்ட பிரவீன்குமார், ஆறுமுகத்திற்கு ஒரே மகன் என்றும், பிளஸ் டூ படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்ததாகவும் தெரியவந்தது. நேற்று காலை 10 மணிக்கு மேல்தான் பிரவீன்குமார் நண்பர்களை பார்ப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே சென்றதாகவும் தெரியவந்தது. மேலும், இதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுடன் பிரவீன்குமாருக்கு முன்விரோதம் இருந்ததாகவும், இதன்காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Walipar ,
× RELATED 6 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்தார் ஸ்ரீதிவ்யா