×

மேலூர் அருகே புதிய தண்ணீர் தொட்டி அமைப்பு

மேலூர், ஏப்.12: மேலூர் அருகே கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தொட்டி பலத்த சத்ததுடன் வெடித்து பிளந்ததால், அவ்விடத்தில் ‘தினகரன்‘ செய்தி எதிரொலியாக புதிய சின்டெக்ஸ் தொட்டி நேற்று வைக்கப்பட்டது.
மேலூர் அருகே கம்பூர் ஊராட்சியில் அலங்கம்பட்டியில் சாலையில் இருந்த சின்டெக்ஸ் தொட்டி ஒன்று நீண்ட காலமாக பயனற்ற நிலையில் இருந்தது. இது குறித்து கிராம மக்கள் கொட்டாம்பட்டி யூனியன் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் கொடுக்கவே அந்த இடத்தில் பழைய சின்டெக்ஸ் தொட்டி ஒன்று வைக்கப்பட்டது. அந்த தொட்டி நேற்று முன்தினம் வெடித்து பிளந்து ஒரு பக்கமாக சாய்ந்தது. இது குறித்து நேற்று ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று அவ்விடத்தில் புதிய சின்டெக்ஸ் தொட்டியை கொட்டாம்பட்டி யூனியன் அதிகாரிகள் கொண்டு வந்து வைத்து, சேதமான பகுதிகளை சிமென்டால் பூசி சரி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Melur ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!