×

தட்டார்மடம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சாத்தான்குளம், ஏப்.12:  தட்டார்மடம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 3டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போ வேன் மற்றும் இரு பைக்கை பறிமுதல் செய்தனர். தட்டார்மடம் அருகே சிலர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கேரளா பகுதிக்கு கடத்தி செல்ல இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தட்டார்மடம் எஸ்.ஐ குரூஸ் மைக்கேல் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வாலத்தூரில் கேரளா பதிவு எண் கொண்ட டெம்போ வேனை மடக்கினர். போலீசாரை கண்டதும் டெம்போ வேன் மற்றும் பைக்கை நிறுத்தி விட்டு அதிலிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து டெம்போ வேனில் போலீசார் சோதனை நடத்தியபோது அதில் 3 டன் ரேஷன் அரிசி மூடைகள் இருப்பதும், அவற்றை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசி மூடைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போ வேன், இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபர்களை தேடி வருகினறனர்.

Tags : Kerala ,Thattaramadam ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...