×

குளத்தூரில் இருதரப்பினர் மோதலில் 7 பேர் மீது வழக்கு

குளத்தூர்,ஏப்.12: குளத்தூர் அண்ணாநகர் காலனியில்  இருதரப்பினர் மோதலில் 7பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குளத்தூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் மகன் பாலமுருகன்(41). இவருக்கும் அப்பகுதியில் உள்ள முத்துராஜ் மனைவி அமுதா(37)  குடும்பத்தினருக்கும் இடையே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உள்ள முன்பகையால் கடந்த இருதினங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரிடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. இதில்  இருதரப்பிலும் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து குளத்தூர் காவல்நிலையத்தில் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில்  பால்ராஜ்(21), தீரன்(25), தரணி(23), விஜய்பிரகாஷ் ஆகிய 4பேர் மீதும், அமுதா அளித்த புகாரின் பேரில் பாலமுருகன்(41), முத்துகனி(32), முத்து கிருஷ்ணன்(53) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து எஸ்ஐ கங்கைநாதபாண்டியன் விசாரித்து வருகிறார்.

Tags : Kulathur ,
× RELATED வைப்பார் மல்லம்மாள் கோயில் திருவிழா