×

குறைந்தவிலையில் செல்போன் வாங்கி தருவதாக நாகை வாலிபரை ஏமாற்றிய உ.பி.யை சேர்ந்தவர் மீது வழக்கு

நாகை,ஏப்.12: குறைந்த விலையில் செல்போன் வாங்கி தருவதாக நாகை வாலிபரை ஏமாற்றிய உத்திரபிரேதச மாநிலத்தைச் சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாகை கொட்டுபாளையத் தெருவை சேர்ந்தவர் முகம்மது நிவாஸ் (23). இவருக்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முகேஷ் மூர்த்தி என்பவருக்கும் சமூக வலைதளம் (இன்ஸ்டாகிராம்) மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் முகேஷ் மூர்த்தி குறைந்த விலையில் செல்போன் தருவதாக முகமது நிவாசிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் ரூ.39 ஆயிரத்து 500 முகேஷ்மூர்த்தியின் வங்கி கணக்குக்கு அனுப்பினார். 2 நாட்கள் ஆகியும் செல்போன் கிடைக்கவில்லை. மேலும் முகேஷ்மூர்த்தியை தொடர் கொள்ள நினைத்த போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. இதையடுத்து முகமது நிவாஸ் நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : UP ,Naga Valiparai ,
× RELATED பஞ்சுப் போர்வை போல காணப்படும்...