×

ஏர்வாடி அருகே மோதலில் இருவர் காயம்

களக்காடு, ஏப்.12:  ஏர்வாடி அருகேயுள்ள டோனாவூர் கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து சிலர் ஒரு வேனில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது டோனாவூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி எட்வின் துரை (40) வேனை மறித்து தகராறில் ஈடுபட்டார். அவரிடம், டோனாவூர் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த இஸ்ரவேல் (36) ஒதுங்கி செல்லுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த எட்வின் துரை, இஸ்ரவேலை தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து இஸ்ரவேல், ஏர்வாடி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் எட்வின் துரை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுபோல எட்வின் துரை, கொடுத்துள்ள புகாரில் இஸ்ரவேல், ஐசக் ஆகியோர் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். காயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து போலீசார் இஸ்ரவேல், ஐசக் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Ervadi ,
× RELATED ஏர்வாடி அருகே கார் டிரைவர் மீது தாக்குதல்