×

சங்கரன்கோவிலில் மருத்துவ ஊழியர் மாயம்

சங்கரன்கோவில், ஏப்.12: சங்கரன்கோவில் காந்திநகர் கீழ 2ம் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி (36). இவரது மனைவி சுப்புத்தாய். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆறுமுகசாமி சங்கரன்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை 4.30 மணிக்கு சுப்புதாய் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ஆறுமுகசாமிக்கு போன் செய்துள்ளார். போன் சுவிட்ச்ஆப் ஆக இருந்ததால் சந்தேகமடைந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் ஆறுமுகச்சாமி மாலை 4 மணிக்கே சென்றுவிட்டதாக கூறினர்.  இதனால் பதற்றமடைந்த சுப்புத்தாய், அவரை பற்றிய தகவல் இல்லாததால் சங்கரன்கோவில் டவுண் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sankarankoil ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...