×

போச்சம்பள்ளி சந்தையில் ₹2 கோடிக்கு ஆடுகள் விற்பனை


போச்சம்பள்ளி, ஏப்.12: போச்சம்பள்ளி சந்தையில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு ₹2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று காலை வாரச்சந்தை கூடியது. இங்கு,  ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் ஏராளமானோர் வந்தனர். அதே போல் கிருஷ்ணகிரி, ஓசூர்,கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் வந்திருந்தனர். இதில் நாளை தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், 10 கிலோ கொண்ட ஆடு ₹6000 முதல் ₹7000 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று நடந்த சந்தையில், ₹2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சந்தையில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பெரும்பாலானோர் மாஸ்க் அணியவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக இருந்தனர். தற்போது கொரோனா பரவல் 2 வேகமா பரவி வரும் நிலையில், இதுகுறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...