×

திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

காவேரிப்பட்டணம், ஏப்.12: காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில், திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர செயலாளர் விவேகானந்தன் தலைமை தாங்கி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் ராஜன், ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, அவைத்தலைவர் சென்னகேசவன், நகர துணை செயலாளர் முனிராஜ், பேரூர் பொருளாளர் சாபுதீன், பாலகிருஷ்ணன், ஞானபிரகாஷ், பிரகாஷ், பாரதிராஜா, தினேஷ், காமேஷ், சின்ன பையன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தர்பூசணி, மோர், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

Tags : DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...