×

அடிக்கடி திருட்டில் ஈடுபட்ட இருவருக்கு ஓராண்டு சிறை

சிவகாசி அருகே, கொங்கலாபுரத்தில் உள்ள பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் முருகன் (23). சித்துராஜபுரம் ராமசாமி நகரைச் சேர்ந்தவர் ஜான்பீட்டர் (39). இவர்கள் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் சப்கலெக்டர் தினேஷ்குமாரிடம் போலீசார் இருவரையும் ஆஜர்படுத்தி, ஓராண்டுக்கு எந்தச் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கினர். மீறினால் ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என எச்சரித்து இருந்தனர். இந்நிலையில், ஒரு வருடத்திற்குள் 2 பேரும் மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டனர். எனவே சப்கலெக்டர் தினேஷ்குமார், இருவரையும்  ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி 2 பேரையும் போலீசார் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை