×

தேனி மாவட்டத்தில் ரமலான் சிறப்பு தொழுகைக்கு 10 மணி வரை அனுமதி வேண்டும் இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தல்

தேவாரம், ஏப்.10: ரமலான் மாத சிறப்பு தொழுகைக்கு இரவு 10 மணி வரை அனுமதி அளிக்க வேண்டும் என பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் வலியுறுத்தி உள்ளன.
தேனி மாவட்ட இஸ்லாமிய அமைப்புகள் தமிழக அரசிற்கு விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஏப்.14ம் தேதி புனித ரமலான் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் வழிப்பாட்டு தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பினால் புனித ரமலான் மாதத்தில் பள்ளி வாசல்களில் இரவு நேர சிறப்பு தொழுகைகள் நடை பெறாத நிலை உருவாகும். எனவே, இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு மறு பரிசிலினை செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு முழு ஊரங்கு காரணத்தனால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. மேலும் புனித ரமலான் மாதத்திலும் பள்ளி வாசல்களில் தொழுகைகள் நடத்த முடியாமல் இஸ்லாமியர்கள் பெரும் சிரமத்துகுள்ளாகினர். அதே போல் இந்த ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் இரவு நேர சிறப்பு தொழுகைகள் நடத்த முடியாமல் போய்விடுமோ என்கிற மனஉளைச்சலில் இஸ்லாமியர்கள் உள்ளனர். எனவே, இஸ்லாமியர்களின் நலனை கருத்தில் கொண்டு புனித ரமலான் மாதத்தில் பள்ளி வாசல்களில் 30 நாட்கள் இரவு நேர சிறப்பு தொழுகைக்கு இரவு 10 மணி வரை அனுமதி அளிக்க வேண்டும் என  இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Tags : Islamic ,Theni district ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில்...