×

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பாட்டில் மட்டும் இருக்கு சானிடைசர் தான் இல்லை உத்தமபாளையம் பொதுமக்கள் புகார்

உத்தமபாளையம், ஏப்.10: உத்தமபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையான சானிடைசர் வசதி இல்லாததால் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உத்தமபாளையம் தாலுகா தலைநகரமாக உள்ளது. இங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு  தினந்தோறும் அதிகமான பத்திரப்பதிவுகள் வருகிறது. குறிப்பாக ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராமசாமி நாயக்கன்பட்டி என பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர்.  ஏராளமான அளவில் பத்திரப் பதிவுகள்  தினமும் நடக்கிறது.
இதனால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறையான கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், உத்தமபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு, தினசரி நூற்றுக்கணக்கானோர் வருகை தருவதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
முன்னெச்சரிக்கையாக கைகழுவதற்கு,  சோப்பு மட்டும் உள்ளது. ஆனால், தண்ணீர் இல்லை. அதேபோல் சானிடைசர் பாட்டில் மட்டுமே உள்ளது. சானிடைசர் இல்லாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட பத்திரப்பதிவுத்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ