×

திருப்புத்தூரில் 354 பேருக்கு கொரோனா தடுப்பூசி

திருப்புத்தூர், ஏப்.10: திருப்புத்தூரில் நடந்த இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாமில் 354 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளபடி, அதிகமாக பரவி வரும் கொரோனா வைரசை தடுப்பதற்காக 45 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் எளிதாக தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்காக, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை மருத்துவ குழுவினரும், திருப்புத்தூர் வசந்த பெருவிழா குழு மற்றும் பசுமை பாரதம் அமைப்பும் இணைந்து இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடத்தினர்.
திருப்புத்தூர் கண்டரமாணிக்கம் ரோட்டில் உள்ள மஹாலில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த முகாமை வசந்த பெருவிழா குழு தலைவர் தங்கவேல்பிள்ளை தொடங்கி வைத்தார். இதில் இரண்டு நாட்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 134 பேருக்கும், 45 வய
திற்கு மேற்பட்டவர்கள் 220 நபர்களுக்கும் என மொத்தம் 354 பேருக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டது. இதில்| திருக்கோஷ்டியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், கணேஷ்குமார், .ஹேமலதா, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட் ராஜ் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் மற்றும் வசந்த பெருவிழா குழு, பசுமை பாரதம் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Tiruputhur ,
× RELATED மஞ்சு விரட்டில் மாடு முட்டி முதியவர் சாவு