×

மதுரை மாவட்டத்தில் 1.65 லட்சம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை, ஏப். 10:  மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நேற்று முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டில் பிரதமர் மோடி முதலில் தடுப்பூசியை தொடங்கி வைத்தபோது, இதே அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா இரண்டாம் அலையிலிருந்து பொதுமக்களை காக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். அவசர தேவைக்கு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1.65 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளனர்.
 இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Coronavirus Minister ,RP Udayakumar ,Madurai district ,
× RELATED பத்தாம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம்...