×

சிவாலயங்களில் பிரதோஷ விழா

சோழவந்தான், ஏப். 10: சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி சோழவந்தான் பிரளயநாதர் (சிவன்) கோயிலில் நடந்த விழாவில்  பிரளயநாதர் சுவாமி, பிரளயநாயகி அம்மன், நந்தீஸ்வரர்,  சனீஸ்வரலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பின்னர்  ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலை வலம் வந்தனர். அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு  பிரசாதம் வழங்கினர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா  ஏற்பாடுகளை தக்கார் இளமதி, எம்.வி.எம் குழுமத் தலைவர் மணி முத்தையா,  தொழிலதிபர் வள்ளிமயில், பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் மற்றும்  பிரதோஷக் குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் திருவேடகம் ஏடகநாதர்  கோயில், தென்கரை மூலநாத சுவாமி கோயில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருதோதைய  ஈஸ்வரமுடையார் கோயில், மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,  பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.

Tags : Pradosa festival ,Shiva temples ,
× RELATED க.பரமத்தி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு