×

சின்னாளபட்டியில் 3 பேருக்கு கொரோனா

சின்னாளபட்டி, ஏப். 10: சின்னாளபட்டியில் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபர்களால் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் ஆனது. சின்னாளபட்டியில் திருநகர், மேட்டுப்பட்டி, ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருநகரைச் சேர்ந்த நபர், பெங்களுரிலிருந்து வந்து சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக வந்துள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுபோல மேட்டுப்பட்டி மயானத்தெருவை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தேனி மாவட்டத்திலிருந்து வந்துள்ளார். அவருக்கும் கொரோனா அறிகுறி தெரிந்தவுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்க்கப்பட்ட நிலை சுகப்பிரசவம் ஆனது. தற்போது குழந்தைக்கும் தொற்று உள்ளதா என மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 ஜீவாநகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது தாயின் மருத்துவ சிகிச்சைக்காக சென்ற போது அங்கு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சின்னாளபட்டி வட்டார மருத்துவ அலுவலர் பரத்கண்ணன் தலைமையில் மருத்துவக்குழுவினர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அப்பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். தோடர்ந்து 3 பேருக்கு கொரோனா தொற்று பரவியதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chinnalapatti ,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...