×

சிவகிரியில் ஆசிட் குடித்த மூதாட்டி சாவு

சிவகிரி, ஏப்.10: சிவகிரி வடக்கு ரதவீதி முதல் சந்தில் வசிப்பவர் மாரியப்பன். இவரது மனைவி ராமலட்சுமி (65). இவர் மூட்டுவலி, வயிற்றுவலியாலும் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார்.
இருப்பினும் குணமாகாத விரக்தியில் வீட்டில் இருந்த பாத்ரூம் ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் விரைந்து சென்று ராமலட்சுமியை சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து மாரியப்பன், ெகாடுத்த புகாரின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Sivagiri ,
× RELATED குட்கா விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது