×

செங்கோட்டையில் பரபரப்பு காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிப்பு

செங்கோட்டை, ஏப். 10: செங்கோட்டை காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் கருப்பசாமி (37). இவர் மீது செங்கோட்டை காவல் நிலையத்தில் பெட்டி கேஸ் உள்ளதாகவும், அதனை அபராதம் செலுத்தி முடிக்குமாறு போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் அவமானம் அடைந்த கருப்பசாமி, நேற்று முன்தினம் இரவு மண்ணெண்ணெய் கேனுடன் செங்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்தார். திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து சாக்கு மற்றும் துணிகள் வைத்து தீயை அணைத்து அவரை மீட்டு அவரை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.  காவல்நிலையம் முன் வாலிபர் தீக்குளித்த சம்பவம் செங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Red Fort ,
× RELATED செங்கோட்டை அருகே அரசுப் பேருந்தில்...