×

சேலம் திமுக எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு அ.தி.மு.க.,பிரமுகர், ரவுடி உள்பட 7 பேர் மீது வழக்கு

சேலம், ஏப்.10: சேலம் திமுக எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி, அதிமுக வட்ட செயலாளர் உள்பட 7 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் கன்னங்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடந்த 5ம்தேதி இரவு அதிமுக வினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுப்பதாக கிடைத்த தகவலின்பேரில் திமுகவினர் அங்கு விரைந்து சென்று அவர்களை தடுத்தனர். அப்போது அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார், இருதரப்பினரையும் விரட்டி விட்டனர்.இந்நிலையில் திமுகவை சேர்ந்த கோகுல் காளிதாஸ் என்பவர் கன்னங்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரில், ‘ரவுடி ஜெகதீஸ்வரன், 8வது வார்டு அதிமுக செயலாளரும், சொர்ணபுரி கூட்டுறவு சங்க தலைவருமான நாகராஜன், சேட்டான் மகன் மணிகண்டன், தென்னரசன், சொர்ணபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்க்கும் சக்தி, சாராய வியாபாரி பப்பாளி(எ) தினேஷ், சண்முகம், ரஞ்சித், குணா, காந்தி நகர் ஹரி உள்ளிட்டோர் உருட்டுக்கட்டையால் அடித்தனர். சேலம் வடக்கு தொகுதி திமுக  எம்எல்ஏவை கொலை செய்யப்போவதாக ரவுடி ஜெகதீஸ்வரன் மிரட்டினான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

 இதையடுத்து ரவுடி ஜெகதீஸ்வரன் உள்பட 10 பேர் மற்றும் பெயர்  தெரியாத 50 பேர் மீது தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தையால் பேசுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் ரவுடி ஜெகதீஸ்வரன், வடக்கு தொகுதி எம்எல்ஏவுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தது சமூக வலைதலங்களில் பரவியது. அதே போல அதிமுகவை சேர்ந்த சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் கோகுல்காளிதாஸ், அவரது தந்தை ராஜேந்திரன், குபேந்திரன் மற்றும் 100பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Salem ,DMK ,AIADMK ,Pramukar ,Rowdy ,
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...