×

ரம்ஜான் பண்டிகையையொட்டி தொழுகை நேரத்தை நீட்டிக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

திருச்சி, ஏப். 10: முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொது செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், தமிழகத்தில் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரும் 12ம் தேதி ரம்ஜான் நோன்பு மாதம் தொடங்கப்பட உள்ளது. இதனால் அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். எனவே முஸ்லிம்கள் வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை அதிகரித்து வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்ைக எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...