×

பாபநாசத்தில் தனியார் பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

பாபநாசம், ஏப்.10: கும்பகோணத்தில் இருந்து தஞ்சைக்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை சுரேஷ் (39) ஓட்டி சென்றார். சதீஷ்குமார் (30) கண்டக்டராக இருந்தார். பேருந்து பாபநாசம் அடுத்த ராஜகிரி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் பொக்லைன் இயந்திரம் சென்றது. இதை விஜய் (21) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்து டிரைவர் வழிவிடுமாறு ஹாரன் அடித்து கொண்டே இருந்தார். இதில் சுரேஷ், விஜய் ஆகியோருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பேருந்து தஞ்சாவூர் சென்று விட்டு மீண்டும் வந்தது. அப்போது பேருந்தை ராஜகிரியில் வழி மறித்த விஜய் உருட்டு கட்டையால் சுரேஷ், சதீஷ்குமார் ஆகியோரை தாக்கினார். இதில் காயமடைந்த சுரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Papanasam ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...