×

மாமல்லபுரம் அருகே பயங்கரம்: கார்கள் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி: தம்பதி படுகாயம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். காணவன், மனைவி படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு அடுத்த  பெரியார் நகர் களத்துமேட்டை சேர்ந்தவர்கள் அப்துல்லா (எ) அப்துல் ரசாக் (23). இவரது மனைவி சுவேதா (22). இவர்களது நண்பர்கள் பெரிய நத்தம் அஜய் (எ) லொட்டை அஜய் (21). புலிப்பாக்கம் பூபாலன் (எ) பிரேம்குமார் (25). நேற்று முன்தினம் அப்துல்லா, தனது மனைவியுடன் காரில் சென்னைக்கு சென்றார். அவர்களுடன், நண்பர்கள் அஜய், பூபாலன் ஆகியோர் சென்றனர். இரவு 10.30 மணியளவில் கோவளம் தர்காவுக்கு அனைவரும் சென்றனர். அங்கு தொழுகை முடித்துவிட்டு? கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் புறப்பட்டனர். காரை பூபாலன் ஓட்டி சென்றார்.

பேரூர் வளைவு அருகே திருப்போரூர் செல்வதற்காக காரை வலது புறம் திருப்பியபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற சொகுசு கார், இவர்களது கார் மீது பயங்கரமாக மோதியதில், 4 பேர் ெசன்ற கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், அஜய், பூபாலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். அப்துல் ரசாக், அவரது மனைவி சுவேதா ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி பிரதே பரிேசாதனைக்காகவும், படுகாயமடைந்த தம்பதியை சிகிச்சைக்காவும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Tags : Mamallapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ