×

ஓசூர் அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு திறப்பு

ஓசூர்,ஏப்.10:  ஓசூர் அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து தலைமை மருத்துவர் பூபதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்தாண்டு கொரோனா முதல் அலை வந்தபோது, செப்டம்பர் முதல் ஜனவரி வரை ஓசூர் அரசு  மருத்துவ மனையில் 120 படுக்கைகளுடன் கோவிட் வார்டு திறக்கப்பட்டது. இதில் ஒரே ஒரு உயிர் இழப்பு நடைபெற்றது. தற்போது கொரோனா இரண்டாம் அலை வந்துள்ளது. அதிவேகத்துடன் பரவி வருவதால், நாளை (இன்று) 120 படுக்கைகள் கொண்ட கொரானா  வார்டு திறக்கப்படவுள்ளது. கடந்தாண்டை போல், தற்போதும் இந்த வார்டில் நல்ல பணிகள் மேற்கொண்டு உயிர் இழப்பு இல்லதவாறு செய்ய வேண்டும்.  இதுவரை 7 ஆயிரத்து 150 பேருக்கு கோவிசீல்டு, கோவேக்சின் ஆகிய  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Hosur ,Government ,Hospital ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு