×

கன்டெய்னர் லாரி மீது டூவீலர் மோதியது விபத்தில் தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஏப்.10:  கிருஷ்ணகிரியில் கன்டெய்னர் லாரி மீது டூவீலர் மோதிய விபத்தில், ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா ஜிங்கலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி காந்தி(21). இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த கூலித் தொழிலாளி சதீஷ்குமார்(24) ஆகிய இருவரும், நேற்று முன்தினம் டூவீலரில்,  தங்களது ஊரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றனர்.

அப்போது கிருஷ்ணகிரி அருகே சுபேதார்மேடு என்ற இடத்தில், முன்னால் சென்ற லாரி, எவ்வித சிக்னலும் செய்யாமல் திடீரென திரும்பியது. அப்போது பின்னால் வந்த காந்தியின் டூவீலர், லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டூவீலரை ஓட்டிச்சென்ற காந்தி தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து சென்ற சதீஷ்குமார் நிலை தடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மகாராஜகடை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது