×

அரவக்குறிச்சியில் பொது மின்மயானம் அமைக்கப்படுமா?

அரவக்குறிச்சி, ஏப்.10: அரவக்குறிசியில் மின்மயானம்  அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி ஒன்றியத்தில் அரவக்குறிச்சி, பள்ளபட்டி என இரண்டு பேரூராட்சிகளும், 20 ஊராட்சிகளும் உள்ளன. இதில் சுற்றிலும் நூற்றுக் கணக்கான கிராமங்கள் உள்ளன. பள்ளபட்டி மற்றும் அரவக்குறிச்சியில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளிலும் நவீன பிரேத பரிசோதனை கூடங்கள் உள்ளன. அப்பகுதியில் ஏற்படும் வாகன விபத்திலோ அல்லது வேறு காரணங்களால் உயிர் இழப்பவர்களை அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் உயிரிழப்பவர்கள் உடலை தகனம் செய்ய மின்மயானம் இல்லை. இதனால் பல கிமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள கரூருக்கு கொண்டு சென்று தான் மின் மயானத்தில் தகனம் செய்து வருகின்றனர். இதனால் இறந்தவரின் உடலை தகனம் செய்ய பலமணி நேரம் ஆகின்றது. தேவையில்லாமல் போக்குவரத்து பணச் செலவும் ஏற்படுகின்றது.எனவே அரவக்குறிச்சி பகுதியை மையமாக கொண்டு ஒரு மின் மயானம் அமைக்க வேண்டும் என அரவக்குறிச்சி மற்றும் சுற்றுப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...