×

விவசாயிகள் வேதனை சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி டோக்கன் வழங்கிய 2 பேர் மீது வழக்கு

காரைக்கால். ஏப். 10: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர்கள் கமலக்கண்ணன் காங்கிரஸ் கட்சியிலும், சிவா சுயேச்சையாகவும், தொழிலதிபர் ராஜசேகர் பாஜகவிலும் போட்டியிட்டனர். இந்நிலையில் 6ம் தேதி அன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களித்தால் மின்சார அடுப்பு வழங்குவதாக வாக்காளர் களுக்கு டோக்கன் வழங்கப்படுவதாக தேர்தல் துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி சவுரிராஜன் திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அத்திப்படுகையை சேர்ந்த சிவக்குமார் ( 32) , கீழசுப்புராயபுரத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் ( 31) ஆகிய 2 பேர் மீது திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஏற்கனவே தாமரைசின்னம் பொறிக்கப்பட்ட மோடி படத்துடன் தங்க காசுகள் மற்றும் பணம் வாக்காளர்களுக்கு பாஜகவினரும் , பாமகவினரும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags : Cory ,
× RELATED வருமான வரித்துறையினரை தாக்கியதாக...