×

ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் இரவு 10 மணி வரை திறந்து இருக்க அனுமதிக்க வேண்டும்

பெரம்பலூர்,ஏப்.10: ரமலான் மாதத்தில் இரவு 10 மணி வரை பள்ளிவாசல்கள் திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுஅளித்தனர்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் சுல்தான் மொய்தீன், மாவட்ட செயலாளர் குதரத்துல்லா உள்ளிட்டோர் திரண்டு வந்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:தமிழகத்தில் கொரோனோ தொற்று பரவல் மீண்டும் 2வது முறையாக அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு மீண்டும் விதித்து வருகிறது. இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது, இதனால் முஸ்லிம்கள் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை மாதத்தில் அதற்கான சிறப்பு தொழுகை நடத்த இருப்பதால் தங்களுடைய இரவு நேர தொழுகை பாதிப்பில்லாமல் இருக்கும் வகையில் இரவு 10 மணிவரை பள்ளிவாசல்களை திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
கொரோனோ தொற்று நெறி முறைகளின்படி போதிய சமூக இடைவெளியை பின்பற்றி தங்களது தொழுகையை மேற்கொள்கின்றோம்.இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது