பெரம்பலூர்,ஏப்.10: மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் விதித்து பெரம்பலூரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கொரோனோ தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் உள்ள ரோவர் வளைவு பகுதியில் போலீசார், மாஸ்க் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்க தொடங்கி உள்ளனர். இதில் கார், இருசக்கர வாகனம் மற்றும் நடந்து வரும் நபர்கள் மாஸ்க் அணியாமல் சென்றால் அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். பெரம்பலூர் டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான குழுவினர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முகக்கவசம் இல்லாமல் வரும் நபர்களுக்கு முகக்கவசம் வழங்கியதோடு, அவர்களுக்கு கொரோனோ தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வை எடுத்துரைத்து வருகின்றனர்.