×

அரியலூர் மாவட்டத்தில் காந்தி அமைதி விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர்,ஏப்.10: காந்தி அமைதி விருது பெற தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:சமுதாயம், சமூக நீதி மற்றும் நல்லிணக்க ஒற்றுமை சார்ந்த சமூக சேவையில் ஈடுபடும் தனிநபர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் காந்தி அமைதி பெற விண்ணப்பிக்கலாம். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி நிலையில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுற்ற மக்களை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்லுதலில் ஆர்வமுள்ள தனிநபர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். அரசியலில் நேர்மையாக அகிம்சை வழியில் ஈடுபடுவர்கள், ஆண், பெண் இனபேதமின்றி கறுப்பர், வெள்ளையர் மற்றும் இந்தியரல்லாதோர்க்கும் காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது. அவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அமைதி விருது பெற தகுதியான நபர் அல்லது தொண்டு நிறுவனம் இருப்பின் வரும் 12ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம் அரியலூரில் அறை எண் 20ஐ, அணுகவும்.

Tags : Ariyalur District ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...