×

திருத்துறைப்பூண்டியில் எலுமிச்சை பல மடங்கு விலை உயர்வு

திருத்துறைப்பூண்டி, ஏப். 10: திருத்துறைப்பூண்டி பகுதியில் எலுமிச்சை பழம் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.எலுமிச்சைபழம் அனைத்து விழாக்கள், கோயில் விழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கோடைகாலத்தில் ஜூஸ் போடஅதிகமாக பொதுமக்கள் எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகின்றனர் . திருத்துறைப்பூண்டி பகுதியில்கடந்த மாதம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.50க்கு விற்றது. தற்போது கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் நாட்டு எலுமிச்சை பழம் தற்போது ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது. திருச்சியில் இருந்து வரும் எலுமிச்சை பழம் காய்கறிகடைகளில் கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து காய்கறி கடை உரிமையாளர்கள் கூறுகையில், கடந்த மாதம் ஒரு கிலோ ரூ 45, 50 விற்ற எலுமிச்சை தற்போது ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் விலை உயர்ந்து உள்ளது. காய்கறி கடைக்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் எலுமிச்சை பழம் வாங்காமல் போவது கிடையாது. வரும் மே மாதம் இன்னும் விலை உயர்வு அதிகம் இருக்கும் என்றனர். இந்த விலை உயர்வு என்பது பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடதக்கது ஆகும்.

எலுமிச்சையின் பயன்கள்: நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சையால் நலம் பெறலாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும்.

எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலரா, கிருமிகளை ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும், வாய் துர் நாற்றத்தைப் போக்கும், சரும நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சக்காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும், வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும், விரல் சுற்றிக்கு உதவும், யானைக்கால் வியாதியை குணப்படுத்தும்.விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ அல்லது பிழிந்து சர்க்கரை போட்டோ சாப்பிட்டால் உடனடி தெம்பு ஏற்படும். இதுபோன்று பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சை பழத்திற்கு உண்டு.

Tags : Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் டூவீலரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது