×

திருவாரூர் திருவிக அரசு கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சுழற்சிமுறை பாதுகாப்பு எப்படி?

திருவாரூர், ஏப். 10: திருவாரூர் திருவிக அரசு கலைகல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் கண்காணிப்பு கேமரா கட்டுப் பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாந்தா நேற்று திடீர் ஆய்வு செய்தார்.பின்னர், ஆய்வு குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தா தெரிவித்ததாவது ; திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி, மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, திருவாரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு தொகுதி களில் நடைபெற்ற வாக்குபதிவில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவாரூர், திருவிக கலைகல்லூரியின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அறைக்கு இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் மாநில காவல்துறையினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு வளாகம், பாதுகாப்பு அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 1 துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் 4 அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்பாளர்களின் பிரதிநிதிகள் 24 மணிநேரமும் பார்வையிடுவதற்கு ஏதுவாக கல்லூரி வளாகத்தில் தொலைக்காட்சி வசதியுடன் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்னாக்கி அமைக்கப் பட்டுள்ளது. இப்பணி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்று வரும் என கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருத்துறைப்பூண்டி கீதா, திருவாரூர் பாலசந்திரன், நன்னிலம் பானுகோபன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், காவல் துறையினர்உடனிருந்தனர்.

Tags : Thiruvarur Trivandrum Government College ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...