×

திருவாரூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு பலி

திருவாரூர், ஏப்.10: திருவாரூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற காது கேளாத முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.நாகை மாவட்டம், திருப்பாற்கடல் பகுதியை சேர்ந்தவர் கோபால் (65). காது கேளாத மாற்றுத் திறனாளி. இவர் மற்றும் மனைவி இருவரும் கூலித் தொழிலாளாளர்கள். நேற்று திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தல் என்கிற இடத்தில் கோபால் ரயில்வே கேட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் வந்தது. ஏற்கனவே கோபாலுக்கு காது கேளாது என்பதால் ரயில் வந்த சத்தம் கேட்கவில்லை. இதனால் அவர் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி உயிரிழந்தார்.

இதுகுறித்து ரயில்வே கேட் கீப்பர் அளித்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் மற்றும் நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvarur ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்