×

டிஏபி உரம் மூட்டைக்கு ரூ.500 அதிரடி உயர்வு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கண்டனம் குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி வழங்க கோரிக்கை

மன்னார்குடி, ஏப்.10: டிஏபி உரம் ரூ.1,400 லிருந்து 1,900 ரூபாயாக மூட்டைக்கு ரூ.500 என அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் விலை உயர்வை கைவிட்டு குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மன்னார்குடியில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் பெய்த பேரழிவு பெருமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கதிர்கள் முற்றிலும் அழிந்து போயின.100 சதவீத இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அதற்கான தொகையும் விடுவிக்கப்பட்டது.

முதற்கட்ட தொகை விடுவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 100 சதவீதத்திற்கான தொகையை கணக்கிட்டு முழு தொகையும் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. 50 சதவீத விவசாயிகளுக்கு அதற்கான தொகை வழங்கப்பட்ட நிலையில் மீதம் 50 சதவீத விவ சாயிகளுக்கு இதுவரையிலும் வழங்கப்படாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டுகிறது. எனவே உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவில் விவசாயி களுக்கான இழப்பீட்டு தொகை முழுமையாக சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.விவசாயிகள் கூட்டுறவு வேளாண் கடன், நகை கடன் தள்ளுபடி செய்யப் பட் டது. அதனைத் தொடர்ந்து அதற்கான சான்றுகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக விவசாயிகளிடம் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான நகைகளை விவசாயிகளிடம் வழங்க கூட்டுறவுத்துறை மறுத்து வருவதோடு, தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டுகிறது.

தேர்தல் ஆணையம் விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு நகைகளை உடன் வழங்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மோடி அரசு, தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான இடு பொருட்களின் விலையை உற்பத்தி நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி ஆண்டு தோறும் டிஏ பி , காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலையை பல மடங்கு உயர்த்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று வரையிலும் ஒரு மூட்டை டிஏபி 1400 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 1,900 ரூபாய் விலையை நிர்ணயம் செய்து மூட்டை ஒன்றுக்கு 500 ரூபாயை அதிரடியாக உயர்த்தி அதற்கான விலைப்பட்டியலை இப்கோ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக் கிறோம்.இது குறித்து மத்திய அரசு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். விலை உயர்வை கைவிட்டு விவசாயிகளுக்கு குறைவான விலையில் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Tags : Tamil Nadu ,Cauvery Farmers' Association ,
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...