×

ஏனம்பாக்கம் - தொளவேடு பகுதியில் ஆரணியாற்று பாலத்தில் உடைந்துபோன தடுப்பு சுவர்

ஊத்துக்கோட்டை, ஏப். 9: ஏனம்பாக்கம் - தொளவேடு பகுதியில் ஆரணியாற்றின்  குறுக்கே உள்ள  பாலத்தில் உடைந்து  கிடக்கும்  தடுப்பு சுவரை விபத்து ஏற்படும் முன்  சீரமைத்து தரவேண்டும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.  பெரியபாளையம் அருகே எல்லாபுரம்  ஒன்றியத்தில் ஏனம்பாக்கம்   கிராமம் உள்ளது. இதை சுற்றி கல்பட்டு, மாளந்தூர், ஆவாஜிபேட்டை, மேல்மாளிகைப்பட்டு, கீழ்மாளிகைப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ - மாணவிகள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள், விவசாய பொருட்கள் வாங்குவதற்கும், வேலைகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு  இக்கிராமத்தையொட்டி உள்ள ஏனம்பாக்கம்  ஆரணியாற்றில் இறங்கி  தண்டலம் சென்று அங்கிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை  ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். மழை காலத்தில் ஆற்றில் தண்ணீர் வந்தால் இந்த 20 கிராம மக்கள் செங்காத்தாகுளம் மற்றும் வெங்கல், சீத்தஞ்சேரி கிராமங்களின் வழியாகவும் 10 முதல் 20 கி.மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சென்றனர். இதனால், ஏனம்பாக்கம்  - தொளவேடு ஆரணியாற்றின் இடையே கடந்த 2011 - 2012ம் ஆண்டு ₹ 6 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால், 20 கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.  

இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் தடுப்பு சுவர் திடீரென கடந்த  வருடம்  உடைந்து விட்டது. இதில், இரவு நேரத்தில் கிராமங்களுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.  அவர்களுக்கு  விபத்து ஏற்படுகிறது. எனவே, பாலத்தின் தடுப்புகளை  சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Enambakkam ,Araniyar bridge ,Tholavedu ,
× RELATED அறிவுசார் நகரம் அமைப்பதை கண்டித்து...