×

திருமானூர்அருகே புற்று மண் குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர், ஏப்.9: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடியில் வைத்தியநாத சுவாமி கோயில் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் மண் குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இயற்கை மருத்துவ ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு மண் குளியல் சிகிச்சை எடுத்து கொண்டனர். இது குறித்து கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்க செயலாளர் தங்க சண்முக சுந்தரம் கூறுகையில், வெயிலுக்கு உடலுக்கு நல்ல சிகிச்சை ஆகவும் மேலும் எளிமையான மருத்துவமும் கூட எல்லோரும் செய்து பலன் பெறலாம். கரையான் புற்று மண் களிமண் அல்லது செம்மண் எதுவாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் முதல் நாளே தண்ணீர் விட்டு கொழகொழப்பாக இருப்பது போல பக்குவமாக தயார் செய்து காலை இளம் வெயிலில் உடல் முழுவதும் பூசிக்கொள்ள உடலில் இறந்த செல்கள் வெளியேறும். புதிய செல்கள் உருவாகும் என்றார்.

இயற்க்கை நமக்கு கொடுத்த மருந்துகள் ஏராளம். நாம் அனேக இடங்களில் கரையான் புற்றுகளை பார்த்திருப்போம். இந்த கரையான் புற்றுமண் உடலுக்கு மிகவும் நல்லது. இடிந்துபோன புற்றில் உள்ள அந்த மண்ணை எடுத்து வைத்து இரவு நேரத்தில் ஒரு பாட்டிலில் அந்த மண்ணை சேகரித்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து மறுநாள் அந்த மண்ணை உடலில் பூசிக்கொண்டு இளம் சூடான வெயிலில் முக்கால் மணி நேரம் உடலை காட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் தோலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஏசி அறையில் வேலை செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல வரப்பிரசாதம். உடலில் தேங்கியிருக்கும் இறந்துபோன செல்களை அகற்றுகிறது. உடலில் உள்ள பல நாட்களாக தங்கியுள்ள அழுக்குகளை நீக்குகிறது. வியர்வை வெளியேறுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் சிலருக்கு வியர்வை என்பதே இருக்காது இப்படிப்பட்ட நபர்களுக்கு இந்த மண்குளியல் மிகவும் சிறந்தது. வியர்வை மூலம் தேவையற்ற அழுக்குகளை வெளியேற்ற முடியும். உடலில் உள்ள யூரியா அளவை சரி செய்கிறது. உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இந்த குளியலை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கரையான் புற்று மண்ணை சேகரித்துக் கொண்டு இதனுடன் சிறிது பூண்டு சிறிது கல் உப்பு சேர்த்து மை போல அரைக்க வேண்டும். அரைத்து வைத்த இந்த கலவையை இளம் சூடாக காய்ச்ச வேண்டும். இளம் சூடாக இருக்கும் இந்த கலவையை மூட்டுவலி உள்ளவர்கள் தங்களது மூட்டில் வைத்து பற்று போடலாம். 3 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் மூட்டு வலி முற்றிலுமாக நீங்கிவிடும். உடலில் எந்தப் பகுதியில் அடிபட்டாலும் இந்த வைத்தியத்தை மேற்கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் இயற்கை மருத்துவர் பழனி உட்பட சமூகஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thirumanaur ,
× RELATED திருமானூர் அருகே 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேறுடன் இடமாற்றம்