×

சீர்காழி அருகே நாங்கூர் கோயிலில் வன் புருஷோத்தமன் முத்தங்கி அலங்காரத்தில் சேவை

சீர்காழி, ஏப் .9: சீர்காழி அருகே நாங்கூரில் 108 வைணவ தலங்களில் ஒன்றான வன் புருஷோத்தமன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு 9ம் நாள் விழாவில் பெருமாள் தாயார் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். முன்னதாக பெருமாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Van Purushothaman ,Muthangki ,Nangur temple ,Sirkazhi ,
× RELATED நாங்கூர் வன் புருஷோத்தமன் கோயிலில் திருக்கல்யாணம்