×

ராயனூர்- தாந்தோணி சாலையில் தெருவிளக்குகள் அமைக்க கோரிக்கை

கரூர், ஏப். 9: ராயனூர்- தாந்தோணிமலை சாலையில் தெரு கும்மிருட்டு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியை சந்திக்கின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து குறிஞ்சி நகர் வழியாக தாந்தோணிமலை செல்லும் சாலை உள்ளது. சாலையின் இருபுறமும் குடியிருப்புகள், நிறுவனங்கள் உள்ளன. இலங்கை தமிழர்கள் முகாமும் இந்த பகுதியில் உள்ளன.இரண்டு வழிகளிலும் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. இருப்பினும், குறிப்பிட்டதூரம் வரை இரவு நேரத்தில் சாலை கும்மிருட்டாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ராயனூர் தாந்தோணிமலை இடையே கூடுதல் தெரு விளக்கு கொண்டு வர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் கூடுதல் தெரு விளக்கு அமைத்து தர தேவையான ஏற்பாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Rayanoor-Thanthoni road ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...