×

அரவக்குறிச்சி கிராமப்பகுதியில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் பணி

அரவக்குறிச்சி, ஏப்.9: அரவக்குறிச்சி கிராமப் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கரூர் மாவட்டம் முழுவதும் 37 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா இலவச தடுப்பூசி போட்டுக் கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதாரதுறை மூலம் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. முதல் தவணை போட்டபின் 28ம் நாளில் இரண்டாம் தவணை என மொத்தம் இரண்டு தவணை போடப்படுகின்றது. இதன் படி பொதுமக்களில் 45 வயதுக்கு மேற்பட்ட. நீரிழிவு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய், புற்றுநோய் ஆகிய இணை நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரவக்குறிச்சி வட்டாரத்தில் மலைக்கோவிலூர், குரும்பபட்டி, ஈ.சநத்தம் அரசு வட்டார சுகாதார நிலையம் மற்றும் கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரம், வாங்கல், உப்பிடமங்களம், பஞ்சப்பட்டி, கானியாளம்பட்டி, தோகைமலை, இனுங்கூர் உள்ளிட்ட மாவட்டத்தில் 37 அரசு சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடப்படுகிறது. நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டு கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கிராமங்களில் முதியவர்வர்கள் அதிக அளவில் கொரானா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தடுப்பூசி போட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி வருவது இயல்பான ஒன்று. பயப்படத் தேவையில்லை, இந்த நிலையிருந்தால் தான் தடுப்பூசி உடலில் வேலை செய்கின்றது என்று அர்த்தம் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Tags : Aravakurichi village ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு