×

அதிமுகவிற்கு பிரசாரம் அதிகாரி சஸ்பெண்ட்

மதுரை, ஏப்.9: திருமங்கலம் தொகுதியில் அதிமுகவிற்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்த மகளிர் திட்ட மேலாளரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கரிச்சல்குளத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. மகளிர் திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதன்பேரில் மகளிர் திட்ட மேலாளர் ஜெகதீஸ்வரியை நேற்று சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

Tags : AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...