×

அவனியாபுரத்தில் பால்பண்ணை அதிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு 3 பேருக்கு வலை


அவனியாபுரம், ஏப்.9: அவனியாபுரத்தை சேர்ந்த பால்பண்ணை அதிபருக்கு சரிமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன்(48). இவர் பால் பண்ணை மற்றும் உணவகங்கள் நடத்தி வருகிறார். இவரும் முத்து என்பவரும் இணைந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தனர். அதில் இருவருக்கும் கொடுக்கல் வாங்கலில் ரூ.2 கோடி வரை நிலுவை இருந்து வந்தது. இதனால் இரண்டு பேருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் மகேஸ்வரன் நேற்று காலை அவனியாபுரம் மெயின் ரோட்டில் ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். பலத்த காயமடைந்த மகேஸ்வரன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் பெருங்குடியை சேர்ந்த முத்து, அவரது மகன் ஸ்ரீஹரன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் வெட்டியது தெரியவந்தது. தலைமறைவான 3 பேரையும் அவனியாபுரம்  இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

Tags : Avanyapuram 3 ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...