×

சேலம் எஸ்எஸ்ஐ திடீர் சாவு

சேலம், ஏப்.9: சேலம் இளம்சிறார் குற்றத்தடுப்பு மைய காவல்நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் ராஜா(54). இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திடீரென சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது. இறந்த ராஜாவுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

Tags : Salem ,SSI ,
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை