×

ஊத்தங்கரை அருகே தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி கைது

ஊத்தங்கரை, ஏப்.9: ஊத்தங்கரை அருகே தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட விவசாயி  கைது செய்யப்பட்டார். ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடாசலம்(50), விவசாயி. இவர் தனது  நிலத்தில் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மூலம் ரகசிய தகவல் சென்றது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, ஊத்தங்கரை சிறப்பு எஸ்ஐ ஏகாம்பரம் உள்ளிட்ட போலீசார், மூங்கிலேரி கிராமத்திற்கு சென்றனர். அப்போது ேபாலீசார் விவசாயி வெங்கடாசலத்தின் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதை நேரில் பார்த்து போலீசார் உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து, நேற்று அதிகாலை ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார், வெங்கடாசலத்தை கைது செய்தனர். தொடர்ந்து தோட்டத்தில் பயிரிட்ட கஞ்சா செடி, வீட்டில் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Tags : Uttaranchal ,
× RELATED சிவராத்திரி தரிசன தலங்கள்