×

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி வாலிபர் சாவு

பென்னாகரம், ஏப்.9: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சின்னமாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்த சிவகுமார்.இவரது மகன் ரஞ்சித்குமார்(21). இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று, இவரது பாட்டிக்கு ஈமச்சடங்கு செய்வதற்காக குடும்பத்துடன் ஒகேனக்கல் வந்துள்ளனர். அப்போது ஊட்டமலை பரிசல்துறை அருகே ஆற்றுப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ரஞ்சித்குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால், அடித்து செல்லப்பட்டு ஆற்றில் மூழ்கினார். இது குறித்து உறவினர்கள் ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததன் பேரில், இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் ரஞ்சித்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் மூன்று மணி நேர தேடுதலுக்கு பிறகு, முதலைப்பண்ணை பகுதியில் ரஞ்சித்குமாரை சடலமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Okanagan Cauvery ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி