×

வல்லநாட்டில் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கல்

செய்துங்கநல்லூர், ஏப். 9: கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு செய்துங்கநல்லூர் அருகே வல்லநாட்டில் ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2ம் கட்ட பரவலைத் தடுக்கும்பொருட்டு மாவட்ட சித்த மருத்துவ அலுவலரான டாக்டர் ராஜசெல்வி உத்தரவின்பேரில் பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையம், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வல்லநாடு பஸ் நிலையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்  தலைமை வகித்தனர். 5ம் வார்டு ஒன்றியக் கவுன்சிலர் முத்துராமலிங்கம், பஞ்சாயத்து துணைத்தலைவர்  சுப்புலட்சுமி ராமசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார்  வெங்கடேசன்  முன்னிலை வகித்தனர். சித்த மருத்துவர் செல்வகுமார் வரவேற்றார்.  இதில் வல்லநாடு மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் நங்கமுத்து, தங்கம் ஓட்டல் பரமசிவம், பேபி ஸ்டுடியோ மாரியப்பன், சமூக ஆர்வலர் தங்கராஜ், திருமலை டெக்கரேஷன் முத்துவேல் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் வேம்பன், மகேந்திரன் உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

Tags : Vallanad ,
× RELATED தூத்துக்குடியில் இரவு முழுவதும் படகு மூலம் மக்கள் மீட்பு