×

கோவில்பட்டியில் துணிகரம் வக்கீல் வீட்டில் திருட்டு முயற்சி

கோவில்பட்டி, ஏப். 9: கோவில்பட்டியில் வக்கீல் வீட்டை உடைத்து திருடமுயன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  கோவில்பட்டி, இனாம் மணியாச்சி சாய்பாபா நகரை சேர்ந்த ஆனந்தன் மகன் சுரேஷ் (47). வக்கீலான இவர், சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மனைவி ஜீவரத்தினம் (40) அரசுத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். இரவு வீடுதிரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது கண்டு பதறினர். மேலும் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் புகுந்த மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோதும் பணம், நகை எதுவும் சிக்காததால்  ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags : Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!