×

முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்த அமுதுண்ணாக்குடி தவசியாபுரம் சாலை

சாத்தான்குளம், ஏப். 9: முறையான பராமரி ப்பின்றி அமுதுண்ணாக்குடியில்  இருந்து தவசியாபுரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உருக்குலைந்துள்ளது. அமுதுண்ணாக்குடி  ஊராட்சி பகுதியில் தவசியாபுரம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த   சாலையிடையே டாஸ்மாக் மதுபானகடை, நூலகம், பால்பண்ணை, உள்ளது. மேலும் ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லும் நேரடி சாலை உள்ளது. இந்த சாலை கடந்த  5ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாததால் குண்டும், குழியுமாக உருக்குலைந்துள்ளது. அதிகாரிகள் இதை கண்டும் காணாமல் இருந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  இதனால் இந்த சாலையை பயன்படுத்துவோர் கடும் அவதிக்கு உள்ளாகும் அவலம் தொடர்கிறது. இதனிடையே டாஸ்மாக் கடைக்கு சென்று திரும்பும் குடிமகன்கள் மற்றும் அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளத்தில் தவறிவிழுந்து  காயமடையும் நிலையும் தொடர்கிறது. எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இனியாவது மக்கள் சிரமத்தை உணர்ந்து மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழும் முன் உருக்குலைந்து காணப்படும் அமுதுண்ணாக்குடி- தவசியாபுரம் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : Amuthunnakkudi ,Thavasiyapuram Road ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...