×

வீரவநல்லூர் எஸ்எஸ்ஐ தற்கொலை முயற்சி

வீ.கே.புரம், ஏப்.9: வி.கே.புரம் அருகேயுள்ள அகஸ்தியர்பட்டி பொன்நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (46). இவர் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக நேற்று காலை விஷம் குடித்து  தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Weerawanallur ,
× RELATED வீரவநல்லூர் கொலையில் குற்றவாளிகளை...