×

நீடாமங்கலம் அருகே அரசு பணி செய்த விஏஓவை வழிமறித்து தாக்குதல்

நீடாமங்கலம், ஏப்.8: நீடாமங்கலம் அருகே அரசு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரை வழிமறித்து பட்டா தொடர்பாக கேட்டு தாக்கிய கணவன், மனைவி, மகன் ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.வலங்கைமான் செந்தமிழ்நகரைச் சேர்ந்தவர் அன்புமன்னன்(34). இவர் நீடாமங்கலம் வட்டம் பெரம்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கூடுதல் பொறுப்பாக ரிஷியூர் கிராம பணியையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணியில் இருந்த அரசு அலுவலர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது தொடர்பாக 6ம் தேதி ரிஷியூர் கிராமத்திற்குச் சென்றார். அபபோது ரிஷியூரைச் சேர்ந்த சிவசண்முகவடிவேல் மற்றும் அவரது மனைவி செல்வி, மகன் சிவக்குமார் ஆகியோர் வழிமறித்து பட்டாமாறுதல் தொடர்பாக கேட்டு தகராறு செய்து கிராமநிர்வாக அலுவலர் அன்புமன்னனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின்பேரில் தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : VO ,Needamangalam ,
× RELATED புவி வெப்பமயமாதலை தடுக்க அதிக அளவில்...