×

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்வைப்பு, பலத்த பாதுகாப்பு

கும்பகோணம், ஏப். 8: கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 3 சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நேற்று காலைவாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம் அரசு ஆடவர் கலை கல்லூரியில் எண்ணப் படவுள்ளதால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அங்கு பாதுகாப்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதி தேர்தல் பொதுபார்வையாளர் பிரதாப்சிங், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விஜயன், கமலக்கண்ணன், மதியழகன் மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சிசிடிவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அங்கு வெளி நபர்கள் யாரும் செல்லாத வகையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஆயுதம் தாங்கி இரவு பகலாக பாதுகாப்பு பணியில் உள்ளனர். இரவை பகலாக்கும் ராட்சத மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.


Tags : Kumbakonam ,Thiruvidaimarudur ,Papanasam ,
× RELATED வேளாண் சட்டத்துக்கு ஆதரவு அதிமுக வேட்பாளரை விவசாயிகள் முற்றுகை